Tamilnadu
மே 28ல் காவிரி ஆணையக் கூட்டம் கூடுகிறது!
ஜூன் மாதம் முதல் காவிரியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் மே 28ம் தேதி காவிரி ஆணையர்கள் கூட்டம் கூடுகிறது.
இதற்கு முன்பு, மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆலோசிப்பதற்காக நாளை காவிரி ஒழுங்கு முறை குழு டெல்லியில் கூடுகிறது.
இந்த ஒழுங்குமுறை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நீர் திறப்பது குறித்து மே 28ல் நடைபெறும் காவிரி ஆணையர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
முன்னதாக, குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீரை பெற்று மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”