Tamilnadu
மே 28ல் காவிரி ஆணையக் கூட்டம் கூடுகிறது!
ஜூன் மாதம் முதல் காவிரியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் மே 28ம் தேதி காவிரி ஆணையர்கள் கூட்டம் கூடுகிறது.
இதற்கு முன்பு, மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆலோசிப்பதற்காக நாளை காவிரி ஒழுங்கு முறை குழு டெல்லியில் கூடுகிறது.
இந்த ஒழுங்குமுறை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நீர் திறப்பது குறித்து மே 28ல் நடைபெறும் காவிரி ஆணையர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
முன்னதாக, குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீரை பெற்று மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!