Tamilnadu
மே 28ல் காவிரி ஆணையக் கூட்டம் கூடுகிறது!
ஜூன் மாதம் முதல் காவிரியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் மே 28ம் தேதி காவிரி ஆணையர்கள் கூட்டம் கூடுகிறது.
இதற்கு முன்பு, மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆலோசிப்பதற்காக நாளை காவிரி ஒழுங்கு முறை குழு டெல்லியில் கூடுகிறது.
இந்த ஒழுங்குமுறை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நீர் திறப்பது குறித்து மே 28ல் நடைபெறும் காவிரி ஆணையர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
முன்னதாக, குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீரை பெற்று மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !