Tamilnadu
மே 28ல் காவிரி ஆணையக் கூட்டம் கூடுகிறது!
ஜூன் மாதம் முதல் காவிரியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவைக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் மே 28ம் தேதி காவிரி ஆணையர்கள் கூட்டம் கூடுகிறது.
இதற்கு முன்பு, மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆலோசிப்பதற்காக நாளை காவிரி ஒழுங்கு முறை குழு டெல்லியில் கூடுகிறது.
இந்த ஒழுங்குமுறை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நீர் திறப்பது குறித்து மே 28ல் நடைபெறும் காவிரி ஆணையர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
முன்னதாக, குறுவை சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீரை பெற்று மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!