Tamilnadu
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கப்டும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் , கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.
தேவைக்கேற்ப பாடநூல்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். விலையில்லா பாடநூல்கள் குறைவாக பெறப்பட்டிருப்பின் உரிய படிவத்தில் கூடுதல் தேவைப்பட்டியலை உரிய பாட தலைப்பு வாரியாக பள்ளி கல்வி இயக்ககத்தில் கோரி பெற வேண்டும். அந்த விவரத்தை வரும் 31 ஆம் தேதி அன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
-
“கலைஞர் ஒரு வரலாற்றுப் பதிவு! அவரை யாராலும் முறியடிக்க முடியாது!” : தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டு MP-க்கள் : முதலிடத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி நிதி! : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!
-
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் அடிபணிந்த பிரதமர் மோடி : யார் கொடுத்த உரிமை இது? - முரசொலி!