Tamilnadu
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கப்டும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் , கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.
தேவைக்கேற்ப பாடநூல்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். விலையில்லா பாடநூல்கள் குறைவாக பெறப்பட்டிருப்பின் உரிய படிவத்தில் கூடுதல் தேவைப்பட்டியலை உரிய பாட தலைப்பு வாரியாக பள்ளி கல்வி இயக்ககத்தில் கோரி பெற வேண்டும். அந்த விவரத்தை வரும் 31 ஆம் தேதி அன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!