Tamilnadu
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கப்டும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் , கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.
தேவைக்கேற்ப பாடநூல்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். விலையில்லா பாடநூல்கள் குறைவாக பெறப்பட்டிருப்பின் உரிய படிவத்தில் கூடுதல் தேவைப்பட்டியலை உரிய பாட தலைப்பு வாரியாக பள்ளி கல்வி இயக்ககத்தில் கோரி பெற வேண்டும். அந்த விவரத்தை வரும் 31 ஆம் தேதி அன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!