Tamilnadu
சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு தலைமை ஏற்றிருந்தவர் சத்ய பிரதா சாஹூ.
இதனையடுத்து தேர்தல் பணிகள் முடிவடைந்த நிலையில், மே 23ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் கலந்துகொண்டார் சத்ய பிரதா சாஹூ.
அந்த சமயத்தில், அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
மிரட்டல் சம்பவத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!