Tamilnadu
சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு தலைமை ஏற்றிருந்தவர் சத்ய பிரதா சாஹூ.
இதனையடுத்து தேர்தல் பணிகள் முடிவடைந்த நிலையில், மே 23ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் கலந்துகொண்டார் சத்ய பிரதா சாஹூ.
அந்த சமயத்தில், அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
மிரட்டல் சம்பவத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!