Tamilnadu
சத்யபிரதா சாஹூ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு தலைமை ஏற்றிருந்தவர் சத்ய பிரதா சாஹூ.
இதனையடுத்து தேர்தல் பணிகள் முடிவடைந்த நிலையில், மே 23ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் கலந்துகொண்டார் சத்ய பிரதா சாஹூ.
அந்த சமயத்தில், அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
மிரட்டல் சம்பவத்தை அடுத்து தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!