Tamilnadu

சென்னையில் அனல் காற்றுக்கு அடுத்த 3 நாட்கள் லீவு!

வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் வீசும் வறண்ட காற்றால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், இது இயல்பை விட 5 டிகிரி அதிகமாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல் காற்று வீசுவதால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசாது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.