Tamilnadu
சுகாதாரத் துறை அமைச்சரின் பங்கோடு அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் ஊழல் !
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் , 70 மருத்துவமனைகளில் 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களை குறைவாக பணி அமர்த்தி விட்டு, அதிகமான ஊழியர்கள் வேலை செய்வது போல் போலியான கணக்கு காட்டி பணத்தை கொள்ளை அடித்து வருவது அம்பலமாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பாளர் வேலைகளை தனியார் நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவின் நெருங்கிய உறவினர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த ஊழல், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்று வருகிறது. இதற்கு மேலாவது லஞ்ச ஒழிப்புத்துறை விழித்துக்கொண்டு, ராம்மோகன் ராவ், பத்மாவதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலுக்கு உடந்தையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!