Tamilnadu
6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை - தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை!
கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டதின் 225வது விழாவையொட்டி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா புகைப்படக்கண்காட்சியை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது எனவும், மாணவர்களே தங்கள் படிப்பு மேல் அக்கறை எடுத்து படிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
92 கல்லூரிகளில் 300 பாடபிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடாதது சமூகத்தில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பதால் தான் வெளியிடவில்லை என பதிலளித்தார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அதோடு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வந்த "வேளாண் மற்றும் நீர் பாசனம்" பொறியியல் பட்ட படிப்பு தற்காலிகமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!