Tamilnadu
6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை - தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை!
கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டதின் 225வது விழாவையொட்டி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா புகைப்படக்கண்காட்சியை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது எனவும், மாணவர்களே தங்கள் படிப்பு மேல் அக்கறை எடுத்து படிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
92 கல்லூரிகளில் 300 பாடபிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடாதது சமூகத்தில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பதால் தான் வெளியிடவில்லை என பதிலளித்தார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அதோடு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வந்த "வேளாண் மற்றும் நீர் பாசனம்" பொறியியல் பட்ட படிப்பு தற்காலிகமாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவித்தார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!