Tamilnadu
தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை!
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ராமநாதபுரம் - தூத்துக்குடி விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் தமிழகத்தில் எரிவாயு குழாய் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற கிளை, விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து பெட்ரோலியத்துறை செயலர், சுற்றுச்சூழல் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !