Tamilnadu

வறுமையுடன் வாழ்ந்தபோதும் கலையை செழிக்க வைத்த தமிழர்கள்! | தமிழும் மரபும்

தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பேர் சொல்லும் அளவுக்கு பல பெருமை வாய்ந்த அடையாளங்கள் இருந்தாலும், மூத்த அடையாளமாக கலை திகழ்கிறது. கலை என்பது தமிழ் மக்களின் குருதியில் கலந்து காலம் கடந்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கலை இல்லாமல் காவியங்களே இல்லை என்ற அளவிற்கு தமிழ் மக்கள் தங்கள் கலைகளை பேணி காத்து வந்தனர். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ்க் கலையும், தமிழ் கலைஞர்களும் அக்காலத்தில் எவ்வாறு போற்றப்பட்டனர்? அதன்பிறகு இக்காலத்தில் அவர்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பேச்சிமுத்து ஐயா அவர்கள்.