Tamilnadu
வாக்கு எண்ணிக்கைக்கான சிறப்பு பயிற்சி தமிழகத்தில் துவக்கம் !
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி தலைமையில் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளின் வாக்கு எணிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி, இணைத் தேர்தல் அலுவலர் ஜேக்கப் மற்றும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் கோவிந்தராவ் ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரம் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளுக்கான ஒப்புகை சீட்டு இயந்திரங்களை எண்ண வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதோடு சேர்த்து 43 வாக்குச் சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட உள்ளதால் தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!