Tamilnadu
தென் தமிழகத்தில் மழையும்... வட தமிழகத்தில் அனல் காற்று வீசும்... வானிலை தகவல் !
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
🔴LIVE | கரூர் துயரம் : “விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்..” - பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!
-
“அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்; மக்களின் உயிர் விலைமதிப்பற்றது”: பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
-
"சி.பி.ஐ RSS-BJP-ன் கைப்பாவை என்று சொன்ன விஜய் இன்று அதன் கைப்பாகையாகிவிட்டார்" - முரசொலி விமர்சனம் !
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!