Tamilnadu
13 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தேவை: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை
நாடாளுமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டவை என அனைத்தும் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 3 வாக்குச்சாவடிகளும் பதற்றம் வாய்ந்தவையாக உள்ளதாலும், ஏற்கெனவே பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் சிசிடிவி கேமிரா வைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!