Tamilnadu
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம்!
தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்னிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி பணியில் இருந்துள்ளார். அவருக்கு தீடீரென நெஞ்சுசலி ஏற்பட்டுள்ளது. சம்ப இடத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை பாவனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பாரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வாட்டரத்தில் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !