Tamilnadu
மே 27 வரை தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் : சத்ய பிரதா சாஹூ
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்.,18ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, மே 19ம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் அன்றைய தினமே நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி அன்று எண்ணப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாக்கு எண்ணிக்கை வரை மட்டுமல்லாமல் மே 27ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !