Tamilnadu
வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவது எப்போது? - சத்ய பிரதா விளக்கம் !
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஏப்.,18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
மேலும் பேசிய அவர், மே 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, தேர்தல் அலுவலர்களுக்கு தக்க பயிற்சி வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 கம்பெனி பாதுகாப்பு படை கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !