Tamilnadu
சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தோப்பில் முகமது மீரான்’ உடல்நலக் குறைவால் காலமானார்!
‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற, எழுத்தாளரும், நாவல் ஆசிரியருமான ‘தோப்பில் முகமது மீரான்’ இன்று (மே 10) திருநெல்வேலி வீரபாகு நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.
மொழிபெயர்பு நூல்கள், சிறுகதைகள், நாவல் என பல்வேறு புதினங்களை எழுதியுள்ளார் தோப்பில் மீரான். இவருடைய ‘சாய்வு நாற்காலிகள்’ என்ற நாவல் 1997ம் ஆண்டு மத்திய அரசின் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.
மறைந்த தோப்பில் மீரானின் உடல் இன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி ரகுமான் பேட்டையில் உள்ள ஜூம்மா மசூதியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!