Tamilnadu
சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தோப்பில் முகமது மீரான்’ உடல்நலக் குறைவால் காலமானார்!
‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற, எழுத்தாளரும், நாவல் ஆசிரியருமான ‘தோப்பில் முகமது மீரான்’ இன்று (மே 10) திருநெல்வேலி வீரபாகு நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.
மொழிபெயர்பு நூல்கள், சிறுகதைகள், நாவல் என பல்வேறு புதினங்களை எழுதியுள்ளார் தோப்பில் மீரான். இவருடைய ‘சாய்வு நாற்காலிகள்’ என்ற நாவல் 1997ம் ஆண்டு மத்திய அரசின் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.
மறைந்த தோப்பில் மீரானின் உடல் இன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி ரகுமான் பேட்டையில் உள்ள ஜூம்மா மசூதியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!