Tamilnadu
மின்தடை ஏற்படாமல் இருந்தாலும் 5 பேரும் உயிரிழந்திருப்பார்கள்: டீன் வனிதா மழுப்பல் பதில்!
மே 7ம் தேதி அன்று மதுரையில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக அன்று மாலை 6.30 - 8.30 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட வெண்டிலேட்டர் செயலிழந்ததால், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயர் நீதிமன்றமும், மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து புகார் தொடர்ந்ததில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மின்சாரம் தடை ஏற்படாமல் இருந்திருந்தாலும் நோயாளிகள் ஐவரும் உயிரிழந்திருப்பார்கள் என அலட்சியமாகவும், மழுப்பலாகவும் பதிலளித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!