Tamilnadu
மின்தடை ஏற்படாமல் இருந்தாலும் 5 பேரும் உயிரிழந்திருப்பார்கள்: டீன் வனிதா மழுப்பல் பதில்!
மே 7ம் தேதி அன்று மதுரையில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக அன்று மாலை 6.30 - 8.30 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட வெண்டிலேட்டர் செயலிழந்ததால், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயர் நீதிமன்றமும், மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து புகார் தொடர்ந்ததில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மின்சாரம் தடை ஏற்படாமல் இருந்திருந்தாலும் நோயாளிகள் ஐவரும் உயிரிழந்திருப்பார்கள் என அலட்சியமாகவும், மழுப்பலாகவும் பதிலளித்துள்ளார்.
Also Read
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!