Tamilnadu
மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள்!
தமிழகத்தில் கடந்த ஏப்.,18-ம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதில், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாஹூ மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்13 வாக்குப்பதிவு மையம் குறித்த பட்டியலை வெளியிட்டார்.
13 வாக்குச்சாவடிகளின் விவரம்:
தருமபுரி: 181, 182, 192, 193, 194, 195, 196, 197 ஆகிய 8 வாக்குச்சாவடிகள்
தேனி: 67,197 ஆகிய வாக்குச்சாவடிகள்
கடலூர்: பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள 210-வது வாக்குச்சாவடி
ஈரோடு: திருமங்கலத்தில் உள்ள 248-வது வாக்குச்சாவடி
திருவள்ளூர்: மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள 195-வது வாக்குச்சாவடி
இதேபோல், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியான காமராஜர் நகர் பகுதியில் வருகிற மே 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !