Tamilnadu
1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாக்கு மறுப்பு? : எதிர்க்கட்சிகள் சந்தேகம் !
நாடு முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர்கள் பெரும்பாலோனோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குத் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். தபால் வாக்களித்த 92 ஆயிரத்து 292 பேரின் வாக்குகள் இதுவரையில் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தபால் வாக்கு கிடைக்காமல், இடிசி மூலமும் வாக்களிக்காதோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 718 பேர் ஆகும். இதன்மூலம், சுமார் 1.50 லட்சம் அரசு ஊழியர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.
நாள்தோறும் வரும் அஞ்சல் வாக்குகள் விவரங்களை தேர்தல் மைய தகவல் பலகையில் வெளியிட வேண்டும். ஆனால், நிராகரிக்கப்பட்டோர் எத்தனை பேர், தபால் வாக்கு அளித்தோர் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்குகளில் ஆளும்கட்சி எதேனும் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
Also Read
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!