Tamilnadu
1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாக்கு மறுப்பு? : எதிர்க்கட்சிகள் சந்தேகம் !
நாடு முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர்கள் பெரும்பாலோனோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குத் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். தபால் வாக்களித்த 92 ஆயிரத்து 292 பேரின் வாக்குகள் இதுவரையில் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தபால் வாக்கு கிடைக்காமல், இடிசி மூலமும் வாக்களிக்காதோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 718 பேர் ஆகும். இதன்மூலம், சுமார் 1.50 லட்சம் அரசு ஊழியர்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது.
நாள்தோறும் வரும் அஞ்சல் வாக்குகள் விவரங்களை தேர்தல் மைய தகவல் பலகையில் வெளியிட வேண்டும். ஆனால், நிராகரிக்கப்பட்டோர் எத்தனை பேர், தபால் வாக்கு அளித்தோர் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்குகளில் ஆளும்கட்சி எதேனும் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
Also Read
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!