Tamilnadu
46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்துள்ளது; மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை- சத்ய பிரதா சாஹு
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
ஏபரல் 29-ம் தேதி இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும் சாஹு தெரிவித்துள்ளார். மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் அறிவிக்கவில்லை. தேர்தல் ஆணைய முடிவெடுத்த பிறகே அதுபற்றி தகவல் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இப்போது மேலும் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு கோரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 10 நாள் கழித்து ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும், இது பற்றி இருபது நாள் கழித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பது ஏன் என்ற கேள்வியை தி.மு.க எம்.பி. ஆர்.எஸ்.பாரதி எழுப்பியுள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!