Tamilnadu
விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கூகலூர் பகுதியில் ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
95% விளைச்சல் கண்ட நிலையில் 5% விளைச்சலே உள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கடந்த ஏப்.,30-ம் தேதியே நிறுத்தப்பட்டது.
ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்கள் எஞ்சிய சதவிகித விளைச்சலை அடைய குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகும். ஆனால், திடீரென பவானி சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி கூகலூர் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!