Tamilnadu
விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கூகலூர் பகுதியில் ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
95% விளைச்சல் கண்ட நிலையில் 5% விளைச்சலே உள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கடந்த ஏப்.,30-ம் தேதியே நிறுத்தப்பட்டது.
ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்கள் எஞ்சிய சதவிகித விளைச்சலை அடைய குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகும். ஆனால், திடீரென பவானி சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி கூகலூர் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
Also Read
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !
-
தொடங்கும் வடகிழக்கு பருவமழை... பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர்கள் கூறியது என்ன?
-
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?
-
“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !