Tamilnadu
விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கூகலூர் பகுதியில் ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
95% விளைச்சல் கண்ட நிலையில் 5% விளைச்சலே உள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கடந்த ஏப்.,30-ம் தேதியே நிறுத்தப்பட்டது.
ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்கள் எஞ்சிய சதவிகித விளைச்சலை அடைய குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகும். ஆனால், திடீரென பவானி சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி கூகலூர் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !