Tamilnadu
விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கூகலூர் பகுதியில் ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
95% விளைச்சல் கண்ட நிலையில் 5% விளைச்சலே உள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கடந்த ஏப்.,30-ம் தேதியே நிறுத்தப்பட்டது.
ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்கள் எஞ்சிய சதவிகித விளைச்சலை அடைய குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகும். ஆனால், திடீரென பவானி சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி கூகலூர் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!