Tamilnadu
உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வார்டு வரையறை பணி முடியும் தருவாயில் இருப்பதாக தெரிவித்து. மேலும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு மே 10-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!