Tamilnadu
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில்! #Alert
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்னரே வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே சென்று 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும்.
அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 29-ம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளதால், கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சம் தொட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!