Tamilnadu
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில்! #Alert
தமிழகத்தில் நாளை முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்னரே வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்கும்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே சென்று 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும்.
அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 29-ம் தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளதால், கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சம் தொட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி