Tamilnadu
4 தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்குகி 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 30-ம் தேதி நடந்தது.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டன. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும் . வேட்புமனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றன.இதையடுத்து, தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரவகுறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் 63 பேரும், ஒட்டப்பிடாரத்தில் 15 பேரும், சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் போட்டியிடுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!