Tamilnadu
4 தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்குகி 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 30-ம் தேதி நடந்தது.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டன. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும் . வேட்புமனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றன.இதையடுத்து, தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அரவகுறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் 63 பேரும், ஒட்டப்பிடாரத்தில் 15 பேரும், சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் போட்டியிடுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
-
"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?
-
“ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !
-
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : உடந்தையாக இருந்த சக மாணவன் : 5 சிறுவர்களின் செயலால் அதிர்ச்சி !