Tamilnadu
சென்னையில் இன்று வெயிலுக்கு லீவ்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வட கிழக்கே உள்ள ஒடிசாவில் இருந்து 730 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மே 3ம் தேதி ஒடிசாவின் பூரி அருகே கரையை கடக்கும் என்றும் இதனால், மணிக்கு 205 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர் மேன் தனது முகநூர் பக்கத்தில் ஃபானி புயல் மூலம் ஏற்படும் வானிலை மாற்றம் குறித்து பதிவிட்டுள்ளார்.
வெதர் மேன் பதிவில் இருந்து,
ஃபானி புயலானது இந்த வார இறுதியில் (மே 03) வட கிழக்கு பகுதியில் கரையை கடக்கும். ஆகையால் வட தமிழக மாவட்டங்களான சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிதமான வானிலையே நிலவும். வெயிலுக்கான வாய்ப்பு மிகவும் குறவு என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் தெற்கு மற்றும் தென்கிழக்கே 510 கிமீ தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளதால் ராயலசீமா முதல் வட மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
மேலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களான நீலகிரி, தர்மபுரி, கிரிஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!