Tamilnadu
சென்னையில் இன்று வெயிலுக்கு லீவ்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வட கிழக்கே உள்ள ஒடிசாவில் இருந்து 730 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மே 3ம் தேதி ஒடிசாவின் பூரி அருகே கரையை கடக்கும் என்றும் இதனால், மணிக்கு 205 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர் மேன் தனது முகநூர் பக்கத்தில் ஃபானி புயல் மூலம் ஏற்படும் வானிலை மாற்றம் குறித்து பதிவிட்டுள்ளார்.
வெதர் மேன் பதிவில் இருந்து,
ஃபானி புயலானது இந்த வார இறுதியில் (மே 03) வட கிழக்கு பகுதியில் கரையை கடக்கும். ஆகையால் வட தமிழக மாவட்டங்களான சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிதமான வானிலையே நிலவும். வெயிலுக்கான வாய்ப்பு மிகவும் குறவு என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் தெற்கு மற்றும் தென்கிழக்கே 510 கிமீ தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளதால் ராயலசீமா முதல் வட மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
மேலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களான நீலகிரி, தர்மபுரி, கிரிஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நாளை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
- 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!