Tamilnadu
உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றது ஃபானி: சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னைக்கு வட கிழக்கே, 420 கிமீ தொலைவில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளது. இது உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து மே 3ம் தேதி ஒடிசா மாநில பூரி அருகே கரையை கடக்கும்
இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 30-40 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். ஆகையால் மே 3 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வறண்ட வானிலையே காணப்படும்.
மேலும், ஃபானி புயல் கரையை கடந்த பின்னர் தமிழகத்தில் காலை வேளையில் அனல் காற்றும், பிற்பகலில் கடல் காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!