Tamilnadu

பொள்ளாச்சி வன்புணர்வு வழக்கில் கைதான ஐவர் மீதும் பாலியல் பிரிவில் வழக்குப்பதிவு!

தமிழகத்தையே புரட்டிப்போட்ட மிக கொடூரமான செயல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செயல். கல்லூரி மாணவிகள், இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி ஏமாற்றி அவர்களை பாலியல் ரீதியாக கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்த விவகாரத்தில் அதிமுக அரசின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனின் தொடர்பும் உள்ளது பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக வெளிவந்தது.

இதனை அடுத்து, பெண்களை மிரட்டி, வீடியோ எடுத்ததில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடியின் வசம் சென்று விசாரிக்கப்பட்டு வந்தது.

கைதானவர்களில் ஒருவனான மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் மூலம் பல முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. அதன் அடிப்படையில் ஐவரின் மீதும் ஏற்கெனவே போடப்பட்ட வழக்குடன் சேர்த்து பாலியல் கொடுமை பிரிவிலும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.