Tamilnadu
மக்கள் எதிர்ப்பை மீறி கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணி தொடக்கம் : விவசாயிகள் வேதனை!
சீர்காழியில் 29 கிலோ மீட்டர் தொலைவுக்கு கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக நாங்கூரில் விவசாய விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. விளை நிலங்களில் ராட்சத எரிவாயு குழாய்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கெயில் நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் 13-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் மூலம் கெயில் நிறுவனம் பணிகளை நிறுத்துவைத்தது.
அதனை தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என தெரிகிறது. பின்னர் கிராம மக்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்தார்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் நாங்கூரில் கெயில் நிறுவனத்தின் ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பாதிக்கும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
Also Read
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!
-
கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் : முன்னாள் பேரா.நிர்மலா தேவிக்கு சிறை தண்டனை அறிவிப்பு - விவரம் என்ன?
-
“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
“Covishield தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும்” - மருந்து நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக் - பின்னணி என்ன?