Tamilnadu

கன்னியாகுமரியில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !பணிச்சுமை காரணமா ?

குமரி மாவட்டம் லோயர் கோதையார் நீர்மின் திட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போது இன்று காவலர் அஜின் ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 2018ல் பணிக்கு சேர்ந்த இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார்.

திருநெல்வேலி மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணியாற்றி வந்த காவலர் அஜின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.