Tamilnadu
பாடிய நல்லூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் !
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ளது பாடியநல்லூர்.இந்த பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்கச்சாவடியில் அப்பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரிடமும் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட்டில் பணிபுரியும் வடமாநில உழியர்கள், இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியதும் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Also Read
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!