Tamilnadu
பாடிய நல்லூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் !
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ளது பாடியநல்லூர்.இந்த பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்கச்சாவடியில் அப்பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரிடமும் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட்டில் பணிபுரியும் வடமாநில உழியர்கள், இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியதும் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Also Read
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!
-
திருநர்களின் உரிமைகளை பறிக்கும் மசோதா… இந்திய அளவில் கடும் எதிர்ப்பு… பின்வாங்குமா ஒன்றிய பாஜக அரசு!
-
”டெல்லியின் கண்ணசைவிற்கு ஆடும் பழனிசாமி.. இவர் தான் மக்களைக் காப்பாரா?”: அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்!
-
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு… இதில் முழு மனநிறைவு: திருமாவளவன் பேட்டி!