Tamilnadu
பாடிய நல்லூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் !
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ளது பாடியநல்லூர்.இந்த பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்கச்சாவடியில் அப்பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரிடமும் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட்டில் பணிபுரியும் வடமாநில உழியர்கள், இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியதும் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!