Tamilnadu
பாடிய நல்லூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் !
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ளது பாடியநல்லூர்.இந்த பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது.இந்த சுங்கச்சாவடியில் அப்பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுனர்கள் பன்னீர்செல்வம் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரிடமும் அதிக பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட்டில் பணிபுரியும் வடமாநில உழியர்கள், இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியதும் அப்பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!