Tamilnadu
மதுரை மத்திய சிறையில் மோதல் : போலீசார் குவிப்பு !
மதுரை மத்திய சிறையில் போலீஸ் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் கைதிகள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் கூறப்படுகிறது. மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் சிறை வாசலில் குவிப்பு. மதுரை மத்திய சிறைக்கு செல்லும் சாலையில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு அதிகரித்துள்ளனர். கைதிகள் கற்களைக் கொண்டு வீசுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் போலீசை எதிர்த்து கைதிகள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளை கீழே இறங்கும்படி கூறி அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். கைதிகளின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Also Read
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !
-
தொடங்கும் வடகிழக்கு பருவமழை... பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர்கள் கூறியது என்ன?
-
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?
-
“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !