Tamilnadu
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குச் சென்ற பெண் அதிகாரி - மதுரையில் பரபரப்பு!
மதுரை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு சென்றதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்கு வந்து சென்ற பெண் அதிகாரி யார் என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை என்பதால், சு.வெங்கடேசன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவக் கல்லூரி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தத் தகவலறிந்து அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர், சுயேட்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் ஆகியோரும் அங்கு வந்து விளக்கம் கேட்டனர்.
இதையடுத்து மதுரை மருத்துவக்கல்லூரி முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பெண் அதிகாரி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறைக்கு எதிரேயுள்ள ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றதாக, சி.சி.டி.வி காட்சிப் பதிவுகள் காட்டப்பட்டதையடுத்து, உரிய விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரிய வேட்பாளர்கள் கலைந்து சென்றனர்.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!