Tamilnadu
அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குசாவடிகள் - தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களைவத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 மணி முதல் தொடங்கியது.
தமிழ்நாட்டின் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறானதால் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் காலை முதலே வரிசையில் நின்ற மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க போதுமான வசதிகள் இல்லாததாலும் கடும் அதிருப்தி அடைந்தனர். நேற்று சென்னையில் இருந்து வாக்களிக்க சென்ற மக்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தராததால், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் மீது போலீஸ் தடியடியும் நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக தேர்தல் ஏற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாகக் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!