Tamilnadu
அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குசாவடிகள் - தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களைவத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 மணி முதல் தொடங்கியது.
தமிழ்நாட்டின் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறானதால் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் காலை முதலே வரிசையில் நின்ற மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க போதுமான வசதிகள் இல்லாததாலும் கடும் அதிருப்தி அடைந்தனர். நேற்று சென்னையில் இருந்து வாக்களிக்க சென்ற மக்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தராததால், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் மீது போலீஸ் தடியடியும் நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக தேர்தல் ஏற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாகக் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசும் பழனிசாமி - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம் !
-
சிரியா,ஈரானைத் தொடர்ந்து கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதல்... காரணம் என்ன ? உலக நாடுகள் கண்டனம் !
-
நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவர்... எம்.பிக்கள் வாக்களித்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி!
-
கரூரில் களைகட்டும் முப்பெரும் விழா ஏற்பாடு : “1 லட்சம் இருக்கைகள்...” - செந்தில் பாலாஜி தகவல்!
-
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு 'முரசொலி செல்வம் விருது' ... விவரம் உள்ளே !