Tamilnadu

தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு !

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் உடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

தேர்தல் நாளில் வெளியூர்களில் வேலை செய்யும் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊருக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில் இன்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஓட்டுப் போடச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று 650 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்காக இயக்கப்பட உள்ளன. மேலும், நாளை 1500 சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து வாக்காளர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.