Tamilnadu
இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 4 தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஏப்ரல்19 வரை தடை
இரண்டாம் கட்ட மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் பிரசாரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.
6 மணிக்கு மேல் அரசியல் தலைவர்களோ, கட்சி பிரமுகர்களோ எந்த வித பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தொலைக்காட்சி மற்றும் இணையதள விளமபரங்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் ஊடகங்களை சந்திக்கும் போது, பிரசார ரீதியாக எதுவும் பேசக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா என்ற கேள்வி தேர்தல் ஆணையர் முன் வைக்கப்பட்டது. அந்த 4 தொகுதி மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பதால் ஏப்ரல் 19-ம் தேதி வரை அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!