Tamilnadu
இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 4 தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஏப்ரல்19 வரை தடை
இரண்டாம் கட்ட மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் பிரசாரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.
6 மணிக்கு மேல் அரசியல் தலைவர்களோ, கட்சி பிரமுகர்களோ எந்த வித பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தொலைக்காட்சி மற்றும் இணையதள விளமபரங்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் ஊடகங்களை சந்திக்கும் போது, பிரசார ரீதியாக எதுவும் பேசக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா என்ற கேள்வி தேர்தல் ஆணையர் முன் வைக்கப்பட்டது. அந்த 4 தொகுதி மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பதால் ஏப்ரல் 19-ம் தேதி வரை அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.
Also Read
-
இந்தி தணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!