Tamilnadu
12 லட்சம் முதல்முறை வாக்காளர்கள்!
தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்களிப்போரின் எண்ணிக்கை 12,12,550 என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, மே 19-ம் தேதி 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் அபிமானம் பெற்றுள்ளன.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்களிப்போரின் எண்ணிக்கை 12,12,550 என்கிறது தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல். முதல்முறை வாக்களிப்பவர்களைக் கவர எல்லாக் கட்சிகளுமே சமூக வலைதளங்களில் பரப்புரைகளை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!