Sports
3 - 0... சொந்த மண்ணில் White Wash ஆன இந்தியா : 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த துயரம் !
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி எளிதில் வெற்றபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெங்களுரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து புனேவில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சிஅளித்தது.
இதன் மூலம் தொடர்ந்து 18 உள்நாட்டு தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் வலம்வந்த இந்திய அணியின் சாதனைக்கு நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்து தொடரை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி 3 போட்டிகளிலும் தோற்று பரிதாப நிலைக்கு இந்திய அணி சென்றுள்ளது. மேலும் 24 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அனைத்து போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இறுதியாக கடந்த 2000-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை இந்திய அணி முற்றிலுமாக இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த மோசமான தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்திய அணியின் கனவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!