Sports
வரலாற்றில் முதல் முறை... முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் தோல்வி... பரிதாப நிலையில் பாகிஸ்தான் !
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முல்தான் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணி சார்பில் ஹரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஒரே இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த சாதனையை செய்த இரண்டாவது இங்கிலாந்து ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கிரேம் ஃபோலர் (201) & மைக் கேட்டிங் (207) இருவரும் 1985 இல் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இப்படி ஒரு சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்தே திணறியது.
இறுதியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெஸ்ட் வரலாற்றில் இதுவரை முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் அடித்த அணி தோல்வியைத் தழுவியதே இல்லை. ஆனால் அந்த மோசமான வரலாற்றுக்கு பாகிஸ்தான் அணி சொந்தமாகிவுள்ளது. அதோடு சொந்த மண்ணில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதோடு சொந்த மண்ணில் 11 போட்டிகளாக வெற்றியே பெற்றதில்லை என்ற மோசமான சாதனையையும் பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?