Sports
பாரா ஒலிம்பிக்: 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்தியா - முழு விவரம் இதோ!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இல்லாத அளவு இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டு வீரர்கள் துளசிமதி,நித்யஸ்ரீ சிவன், மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் வென்கலப் பதக்கம் வென்று அசத்தினர். மேலும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 7 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
அதுமட்டுமல்லாது 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்ததம் 29 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 2020 ஆண்டு 19 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் முறியடித்து இருக்கிறார்கள்.
மேலும் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் வீரர் என்ற பெருமையை அவனி லெகாரா பெற்றுள்ளார். இந்திய அரசு பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு இன்னும் கூடுதல் ஊக்கம் கொடுத்தால் அவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பதை இந்த பாரீஸ் பாரா ஒலிம்பிக் உறுதி செய்துள்ளது.
Also Read
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி
-
“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வர்ற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM Sir” : உதயநிதி கண்டனம்!
-
‘சிங்கப்பெண் திட்டம்’ ரத்தான நாளில்... பட்டு வேட்டி - சட்டையில் கலக்கிய ‘போட்டோ’ முதல்வர் விஜய்!
-
“விஜய் அரசின் சரிவு தொடங்கி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை : உதயநிதி கடும் கண்டனம்