Sports
”எனது போராட்ட குணம் எப்போதும் மாறாது” : தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத் ஓபன் டாக்!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என சர்வதேச தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வினேஷ் போக்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடைசிவரை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இரவு முழுவதும் எங்கள் போராட்டம் இருந்தது. ஆனால் கடிகாரம் நின்றுவிட்டது. எனது குழுவுக்கும், சக வீரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் சொல்வது, எந்த இலக்கை அடைவதற்காக உழைத்தோமோ அது நிறைவேறாமல் இருப்பதாக உணர்கிறேன்.
என் போராட்ட குணமும், மல்யுத்தமும் எப்போதும் எனக்குள் இருக்கும். சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருந்தால் 2032 வரை நான்விளையாடி இருப்பேன். எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால் நான் எப்போதும் சரியான விஷயங்களுக்காக துணிச்சலுடன் போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Also Read
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!