Sports
கோலாகலமாக தொடங்கிய கோபா அமெரிக்கா தொடர் : முதல் போட்டியில் வென்று அசத்திய மெஸ்ஸியின் அர்ஜென்டினா !
ஃபிபா உலகக்கோப்பை, யூரோ கோப்பை தொடருக்கு பின்னர் அதிகம் பேரால் பார்க்கப்படும் கால்பந்து தொடராக கோபா அமெரிக்கா தொடர் திகழ்ந்து வருகிறது. பொதுவாக தென்னமெரிக்க நாடுகளுக்கான தொடராக இருந்தாலும் இதில் வேறு கண்டத்தை சேர்ந்த நாடுகளும் அழைப்பு ரீதியாக பங்கேற்று வருகின்றது.
இந்த முறை இந்த கால்பந்து தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோபா அமெரிக்கா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த தொடரில் வட அமெரிக்காவை சேர்ந்த அணிகளும் பங்கேற்கவுள்ளது.
அந்த வகையில் தென்னமெரிக்காவை சேர்ந்த 10 நாடுகளும் வட அமெரிக்காவை சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்கிறது. உலககோப்பைகளை அதிகம் முறை வென்ற அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடர் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி கனடா அணியை சந்தித்தது. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வாரெஸ் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 88-வது நேரத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கொடுத்த பாஸை லோடாரோ மார்டினெஸ் கோல் அடித்தார். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி கனடாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
Also Read
-
சென்னையில் ரூ.5.10 கோடி செலவில் குளிரூட்டப்பட்ட படப்பிடிப்புத்தளம்! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
அனுமனை அறிவியலோடு ஒப்பிட்டு சர்ச்சை கருத்து! : பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூருக்கு எழும் கண்டனங்கள்!
-
"ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை" - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!