Sports
நார்வே செஸ் தொடர் : உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய தமிழ்நாட்டு வீரர் பிரக்ஞானந்தா!
நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா ராஜாவிற்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார்.
அதேபோல் கார்ல்சன் சற்று வித்தியாசமாக ராணிக்கு அருகில் இள்ள மந்திரிக்கு முன் உள்ள சிப்பாயை நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் 37 வது நகர்த்தலில் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார். மேலும் ரேபிட் போட்டிகளில் கார்ல்சனை வீழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா முதல் முறையாக கிளாசிக் போட்டியில் வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் மூன்று சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகள் முதல் இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். இந்த தோல்வியின் மூலம் கார்ல்சன் ஐந்தாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!