Sports
தொடர் தோல்வி: கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஷாஹீன் அப்ரிடி... மீண்டும் கேப்டனான பாபர் அசாம்!
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது. சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை.
இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். பின்னர் அவர் இடத்தில் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஷாகின் அப்ரிடி மோசமாக செயல்பட்டார். அந்த தொடரை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது.
அதோடு எஸ்எல் தொடரில் ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட பெறாமல் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக பாபர் அசாம் மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் இருந்து பாபர் அசாம் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கும் பாபர் அசாம் கேப்டனாக தொடருவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!