Sports
AFC ஆசிய கோப்பை கால்பந்து : தொடர்ந்து இரண்டாம் முறையாக கோப்பையை வென்றது கத்தார்.. இந்தியாவின் நிலை என்ன ?
AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கடந்த 12-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் இந்தியா குரூப் B பிரிவில் இடம்பெற்றிருந்த நிலையில், 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட ஜப்பான் அணி காலிறுதிப் போட்டியில் ஈரான் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோல முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் காலிறுதியில் வெளியேறியது.
அரையிறுதியில் ஜோர்தான் அணி தென்கொரிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற, மற்றொரு அரையிறுதிப்போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் அணி ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதில் கத்தார் அணி 3-1 என்ற கணக்கில் ஜோர்தான் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையையும் கத்தார் வென்றிருந்தது.
வெறும் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார் அணி, ஆசியாவின் முன்னணி அணிகளை வீழ்த்தி ஆசியக்கோப்பையை தொடர்ந்து இரண்டாம் முறையாக வென்று உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல சர்வதேச கால்பந்து அரங்கில் 87-வது இடத்தில் உள்ள ஜோர்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!