Sports
ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் அபாரம்.. 17 ஓவர்களிலேயே போட்டியை முடித்த இந்தியா.. தொடரை சமன் செய்து அசத்தல் !
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பின்னர்ட் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. பின்ன நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில், நேற்று முக்கியமான 4-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஹோப் மற்றும் ஹெட்மயரின் அதிரடி காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எனினும் இறுதிவரை ஆட்டமிழக்காத ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இந்திய அணியை 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற வைத்தார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !