Sports
தொடக்க வீரராக ராஜஸ்தான் வீரருக்கு வாய்ப்பு.. CSK வீரருக்கு வாய்ப்பு மறுப்பு.. ரோஹித்சர்மா அறிவிப்பு !
டி20, டி10 என கிரிக்கெட் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேர்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.
கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலியா அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் மோசமாகத் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி மேற்கினித்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் யாராவது ஒருவருக்குத்தான் அணியில் இடம்கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரரான களமிறங்குவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித்சர்மா கூறியுள்ளார்.
இதனால் வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் சுப்மான் கில் 3-வது வீரராக களமிறங்குவார் என்றும், ஜெய்ஸ்வாலோடு தான் தொடக்கவீரராக களமிறங்கவுள்ளதாகவும் ரோஹித்சர்மா கூறியுள்ளார். இந்திய அணியில் வழக்கமாக 3-வது வீரராக களமிறங்கும் புஜாரா இந்தத் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பத்திரிகையின் நடுப்பக்கம் ‘விஜய்யின்’ தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!” : மு.க.ஸ்டாலின் பதிவு!
-
“இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!
-
பரந்தூர் விமான நிலையம் : மாற்று இடம் கேட்காத தமிழ்நாடு அரசு - தி.மு.க MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
முதியவரைக் காரில் கடத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகி : வீடியோ வெளியாகிப் பெரும் கொந்தளிப்பு!
-
குதிரை பேரம் - சண்முகத்துக்கு சந்தேகம் இருந்தால் வைகோவிடம் கேட்டுக் கொள்ளட்டும் : முரசொலி!