Sports
"இவர்மட்டும் இல்லை என்றால் CSK-வால் பிளே ஆஃப்-க்கு கூட வரமுடியாது" - முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட போட்டிகளிலும் வெற்றியை தேடித்தந்தார்.
அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.
இவர் தலைமையில் சென்னை அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. மேலும், இரண்டு முறை தவிர மற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் தொடருக்கு முன்னேறி ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.
இந்த நிலையில், தோனி இல்லை என்றால் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட வர முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "சென்னை அணியை வெற்றி தோனியால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது. அந்த அணியில் இருந்து தோனியை மட்டும் எடுத்துவிட்டு பார்த்தால், இவ்வளவு பலம் வாய்ந்த அணியாக நிச்சயம் இருக்காது. ஏனென்றால் இதுபோன்ற ஒரு அணியை வைத்து தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.
இதற்கு முன் 2 சீசன்களை துஷார் தேஷ்பாண்டே விளையாடிய போதும் இவ்வளவு வெற்றிகரமாக அவர் இருக்கவில்லை. பதிரானா, ஆகாஷ் சிங் , தீபக் சஹர், தீக்சனா, மொயின் அலி , ஜடேஜா என இப்படியொரு பவுலிங் அட்டாக்கை வைத்து தோனியால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். ஒருவேளை தோனி இல்லையென்றால், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற போராட வேண்டிய சூழல் வரும்" என்று கூறியுள்ளார்.
Also Read
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
- 
	    
	      பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
- 
	    
	      SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
- 
	    
	      பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- 
	    
	      ”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!