Sports
ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்-பெள்ளியுடன் தோனி ! -CSK சார்பில் வழங்கப்பட்ட பரிசு என்ன தெரியுமா ?
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2023 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’Everything All At Once' திரைப்படம் 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ள நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அதேபோல மற்றொரு இந்திய ஆவணப் படமான ’The Elephant Whisperers’ குறும்படத்துக்கும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆவணப்பட பிரிவில் இந்தியாவின் முதல் ஆஸ்கர் விருது பெற்ற படமாக ’The Elephant Whisperers’ மாறியுள்ளது.
இந்த படம் நீலகிரி தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் குடும்பத்தை இழந்த கைவிடப்பட்ட ரகு என்ற யானைக்குட்டிக்கும் அதைப் பராமரிக்கும் பொம்மன் பெள்ளி என்பவர்களுக்கு இடையே உருவான பிணைப்பு குறித்து பதிவு செய்தது.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் பொம்மன்- பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்றனர். அவர்களை தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிலையில், இன்று பொம்மன்-பெள்ளி தம்பதியினர் மற்றும் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி ஆகியோர் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு தோனியின் சார்பில் தோனியின் 7-ம் நம்பர் பொறிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி பரிசாக வழங்கப்பட்டது. அதோடு அந்த ஜெர்சியில் தோனியின் பெயருக்கு பதில் கார்த்திகி, பொம்மன், பெள்ளி என அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!