Sports
பயிற்சியின்போது காயம்.. இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா மெஸ்ஸி ? வெளிவந்த புதிய தகவல் !
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதேபோல பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய மொரோக்கோ அணியும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியின் அரையிறுதியில் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று பிரமாண்டமான இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில், இந்த போட்டியில் வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அர்ஜென்டினா அணி பங்கேற்ற பயிற்சியில் மெஸ்ஸி கலந்துகொள்ளவில்லை.
இதனால் அவர் காயமடைந்ததாக பேசப்பட்ட நிலையில், தற்போது அவர் அணியோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் அவர் இறுதிப்போட்டியில் களமிறங்குவார் என்பதும் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!