Sports
தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை.. FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவதால் உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமை சென்று சேர்ந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE)துணைத் தலைவராகத் தமிழ்நாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் நாளை 8 தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரிக் டோகோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைத் தலைவரான 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விஸ்வநாதன் ஆனந்துக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!