Sports
தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை.. FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவதால் உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமை சென்று சேர்ந்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE)துணைத் தலைவராகத் தமிழ்நாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் நாளை 8 தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரிக் டோகோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைத் தலைவரான 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விஸ்வநாதன் ஆனந்துக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!