Sports
"என் அடுத்த இலக்கு இதுதான்" -வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக் !
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.
அவரின் இந்த அதிரடியே அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற உதவியது. இதனால் ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கே வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் சக வீரரும் நெடுநாள் நண்பருமான அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த சின்ன சின்ன வெற்றிகள்தான் என்னை அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது, இது எனக்கு பிடித்து இருக்கிறது. எனவே இந்த இணை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.
அடுத்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இப்போதைக்கு என்னுடைய உட்சபட்ச இலக்கே அதுதான்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மருத்துவப் படிப்பில் Sports Quota... MBBS, BDS இட ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அனுமதி.. - விவரம் உள்ளே!
-
100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை! : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!
-
“எப்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?