Sports
"என் அடுத்த இலக்கு இதுதான்" -வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக் !
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.
அவரின் இந்த அதிரடியே அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற உதவியது. இதனால் ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கே வழங்கப்பட்டது.
இந்த போட்டிக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் சக வீரரும் நெடுநாள் நண்பருமான அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த சின்ன சின்ன வெற்றிகள்தான் என்னை அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது, இது எனக்கு பிடித்து இருக்கிறது. எனவே இந்த இணை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.
அடுத்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்காக சிறந்த பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இப்போதைக்கு என்னுடைய உட்சபட்ச இலக்கே அதுதான்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!